கனமழை காரணமாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 30ஆம் தேதி வியாழக்கிழமை விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.மேலும் தமிழகம், காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.பெரம்பூர் ஹைரோடு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளதாகவும் ஜி.சி.சி. கெங்கு ரெட்டி, நுங்கம்பாக்கம், துரைசாமி மற்றும் அரங்கநாதன் சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.